Friday, May 25, 2012

சிரிக்க சிரிக்க - கஞ்சன் கதை

 ஒரு ஊரில் கஞ்சன் ஒருத்தன் இருந்தான். அவன மாதிரியே அவனுக்கு மனைவியும் அமைந்திருந்தாள். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ரெண்டு பேரும்  கருமித்தனமா இருந்தாங்க.

வயலில் வேலை எல்லாம் ஒழுங்கா நடக்கிறதா எண்டு பார்க்க ஒருநாள் அதிகாலைல கஞ்சன் வயலுக்குப் போனான். கொஞ்ச தூரம் போனதும் அவனுக்கு தன்னோட அறையில ஓடிக்கிட்டிருந்த fanன நிறுத்தினோமா எண்டு சந்தேகம்  வந்திச்சாம். 

உடனடியா வீட்டுக்கு திரும்பின அவன், வீட்டுக்கு  வெளில நிண்டு கொண்டு  "ஏ  காமாட்சி!! என்னோட அறையில இருக்கிற fanனை நிறுத்திடேனா பாரு" என்று உரத்த குரல்ல சொன்னானாம்.

தன்னோட  கணவனோட குரலை கேட்ட மனைவி என்னவோ ஏதோ  எண்டு பதறியடித்துக்கொண்டு கதவைத்திறக்க  மாடியிலிருந்து ஓடி வந்தாள். 

மனைவி மாடியிலிருந்து வருவதை ஜன்னல் வழியாக கஞ்சன் பார்த்தான்.  "இப்படி அடிக்கடி கதவை திறந்தால் கதவின் கீல்  எத்தனை நாளைக்கு வரும்? உனக்கு என்ன சொன்னாலும் விளங்கிறதே இல்ல. திறந்திருக்கும் ஜன்னல் வழியாகப் பார்" எண்டு கோபமாக கத்தினானாம்.

அதற்கு ஜன்னல் வழியாக தலைய நீட்டிய மனைவி அவன் எதற்கு வந்திருக்கிறான் எண்டு தெரிந்து கொண்டாள்.
"fan ஓடிகொண்டிருந்தா நான் நிறுத்தமாட்டேனா...... இதற்காகவா வயல்ல  இருந்து வந்தீங்க....... நீங்க போட்டிருக்கிற புது செருப்பு எவ்வளவு தேய்ந்திருக்கும்  எண்டு தெரியுமா ......உங்களுக்கு பொறுப்பே இல்ல" எண்டு கத்தினாள்.

"அடியே என்னை புத்தி இல்லாதவன் எண்டா நினைத்தாய்??? வரும்போதே செருப்பை கைலதான் எடுத்திட்டு வந்தேன். எப்பிடி  என் திறமை"  எண்டானாம் அவன்.
   நல்ல புருசன்...... நல்ல பொண்டாட்டி ........ 


No comments:

Post a Comment