Friday, September 28, 2012

தாண்டவம்- மண்ணாங்கட்டி விமர்சனம்

வணக்கம் நண்பர்களே!




முதலில் யாரோ ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் கதை தன்னோடதெண்னு கோட்டுல கேஸ் எல்லாம் போட்டான். கொய்யால கஜினி பட கதைய சுட்டானு முருகதாஸ் கேஸ் போட்டிருக்கலாம்....... இல்லைனா ரெண்டு பட கதைய சுட்டானு சுந்தர் சீ கேஸ் போட்டிருக்கலாம்................ நீயேண்டா கேஸ் போட்ட மன்கூஸ் மண்டையா.......................


இதுவரைக்கும் இங்கிலிசு படங்கள சுட்டு படமெடுத்த நம்ம டைரக்டர் விஜய் நாலைஞ்சு தமிழ் படங்கள சுட்டு படமெடுத்திருக்காரு.................. படம் கஜினி படம்போல சம்பந்தமே இல்லாமல் ஒரு கொலையோடு ஆரம்பமாகிறது........... பிறகு சம்பந்தமே இல்லாம எமி ஜாக்சன் ஒரு பாடு பாடிகிட்டே என்ட்ரி ஆகிறாங்க.........காரணமே இல்லாம விக்ரம லவ் பண்றாங்க............. விக்ரம் பண்ணும் கொலைகளுக்கு சம்பந்தமே இல்லாம சந்தானம் மாட்டிக்கொள்ள என்ன இழவுடா என்று ரசிகர்கள் யோசிக்கும் போது பிளாஷ்பேக்கில் அனுஷ்கா விக்ரமை திருமணம் செய்து லண்டன வந்து செத்துப்போக, டைரக்டர் கோ படத்திலிருந்து டுவிஸ்டை சுட்டு நம்மள சாகடிக்க......... கொலைக்கு காரணமானவர்களை விக்ரம் பழிவாங்க படம் முடிஞ்சு .......எ பிலிம் பை விஜய்னு டைட்டில்ல போட அவ்வளவு நேரம் அமைதியா இருந்த ரசிகர்கள் இனியாவது படத்த போடுங்கடா என்னு காண்டாகி கத்தினார்கள்.................



விக்ரமுக்கு வயசு போய்விட்டது அவரது கண்களில் நன்றாகவே தெரிந்தது.............ஆனால் வயது உடம்பிலோ நடிப்பிலோ கொஞ்சமும் தெரியவில்லை.......... தனி ஆளாக பல இடங்களில் தாண்டவம் ஆடியிருக்கிறார்......... அதற்கு பொருத்தமாக ஆன்டி அனுஷ்கா அழகாக இருக்கிறார்........இரண்டு பாட்டுக்களை பாடுறதுக்கு மட்டும் எமி ஜாக்சன்.... வேற எதையும் அவர் உருப்படியாக செய்யவில்லை..............
 ஹீரோவுடன் கௌண்டர் அடிப்பதற்கு சரியான வாய்ப்பு இல்லாததால் சந்தானத்தின் காமடிகள் கஞ்சா கருப்பின் காமிடி போல இருந்தது ................
வழமை போல ஜீ வீ பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று.......
விஜயின் திரைக்கதை தன்னுடைய முன்னைய படங்களைப்போல ஆமை வேகத்தில் இருப்பது த்ரில்லர் படத்திற்கு கொஞ்சமும் பொருந்தவில்லை......................குத்துப்பாட்டு இருக்க வேண்டிய இடத்தில் தாலாட்டு பாடியது போல் இருந்தது.......................



கடைசிக்காட்சியில் நாலு கொலை செய்தாலும் ஐந்து கொலை செய்தாலும் ஒரே தண்டனை தான் என்று நாசர் விக்ரமை கொலை செய்ய விட்டுவிட்டு வெளியில் காத்திருப்பது பக்கா நாடகத்தனம்................
பட்ஜெட்டை குறைப்பதற்கு பாடல்களை பயன்படுத்தியிருப்பது நன்றாக தெரிகிறது.............. ஆனால் காட்சிப்படுத்திய விதம் நன்றாக இருந்தது...... 
எவ்வளவு தான் குறைகள் இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு லண்டனை புதுமையாக காட்டுகிறது.............. சண்டைக் காட்சிகளை நீட்டாமல் விட்டதற்கு விஜய்க்கு ஒரு நன்றி................ குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய படமென்றாலும் நண்பர்களோடு விசிலடித்து பார்க்க விரும்புபவர்கள் கொஞ்சம்......................................... ஏதோ உங்க விருப்பப்படி செய்யுங்கப்பா............................
மொத்தத்தில் தாண்டவம் ........ விக்ரம் மட்டுமே ஆடியிருக்கும் சிவதாண்டவம் .............
 

மேலும் விமர்சனங்களுக்கு .............. கீழுள்ள Facebook பக்கத்தை Like செய்யவும்........
மண்ணாங்கட்டி விமர்சனங்கள் 









Wednesday, September 19, 2012

மண்ணாங்கட்டி -வரப்போகும் திரைப்படங்கள்- ஒரு பார்வை



வணக்கம் நண்பர்களே,
 


தமிழ் படங்கள் இல்லாமல் காஞ்சு கருவாடா போயிருக்கும் எங்களுக்கு வரப்போற படங்கள பத்தி பேசியாவது சந்தோசப்படுவம் மாப்புள்ள.........


 


இந்தவருஷம் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார்ட கொச்சடையான் ரிலீஸ்...... நம்ம தலைவர்ட மகள் சௌந்தர்யா இயக்கும் படம்....... ( உங் கொக்கா மூணு மூணுனு ஒரு படம் எடுத்தாளே..... அத ஒரு தடவ கூட பார்க்க முடியல...... இதுல மண்ணாங்கட்டிய வேற விமர்சனம் எழுதச்சொல்லி பலபேர் கேக
்குறாய்ங்க......) தலைவர் Black & White காலத்தில வந்தாலே விசில் பறக்கும்..... அனிமேஷன்ல வாராரு... என்னாக போகுதோ...... ஆனா சில மறுக்க முடியாத உண்மைகள சொல்லியே ஆகணும்..... தலைவர் படம்னு சொன்ன போதிலும் தலைவர்ட முந்திய படங்கள விட கொச்சடையானுக்கு எதிர்பார்ப்பு குறைவு................................................................................................
 
 
கமல் சாரு படம்னாலே ஏதாவது வித்தியாசமா சொல்ல வருவாரு........ (புரியிறது புரியாதது வேற விஷயம்) பிரமாண்டமான ஒரு படம்னு Trailer இல் தெரிந்தாலும், ஆப்கானிஸ்தானுக்கும் பரதநாட்டியத்துக்கும் என்ன சம்பந்தம்னு சுத்தமா புரியல................. அனிருத்தோடு முத்தமிட்ட (ஒருவேளை நம்ம கமல் தான் சொல்லி குடுத்தாரோ) புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரியா (ஆன்டி) ஹீரோயினா நடிக்கிறாரு......... “இவன் யாரென்று தெரிகிறதா” பாடல், பாடல் தொகுப்பு வெளிவர முன்னமே பாடல்களுக்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது...................................................................
 
 
துப்பாக்கின்னு ஏன் தான் பேர் வச்சோம்னு முருகதாசும் விஜய்யும் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கும் படம்............ Teaser ஐ வெளியிடவே பெரும் சிக்கலாக இருந்தும் கூட படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.............. படத்தின் கதை என்னவென்று ஊகிக்கமுடியாத நிலையில் (மண்ணாங்கட்டில போட்டிருக்கோம்ல- துப்பாக்கியின் கதை) பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.....................................................................................
 
 
மாற்றான் பாடல்களை என்னதான் கேவலப்படுத்தினாலும் (மாற்றான் இசை விமர்சனம் ) ஹாரிஸ் மியூசிக் எங்கிறது தனுஷ் மாதிரி......... பாட்ட கேட்ட உடன பிடிக்காது........... கேட்க கேட்க தான் பிடிக்கும்........... தீயே தீயே, நானி கோனி பாடல்கள் இப்போதைய இளைஞர்களின் Ringtoneகள். ......................................................
 
 
அடுத்த வாரம் வெளியாகப்போகும் தாண்டவம் (தாண்டவம் பாடல் விமர்சனம்-தாண்டவம் இசை, முன்னோட்ட விமர்சனம் ) விக்ரம் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல பேருடைய எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது......................... விஜயின் இயக்கத்தில் கிரீடம், மதராசப்பட்டினம்,தெய்வத்திருமகள் என்று வித்தியாசமான (இங்கிலீசு படங்கள்ல சுட்டது தானே.........) கதையம்சங்கள் வெளிவந்த படங்களின் வரிசையில் இதுவும் அமையுமென நினைக்கத்தோன்றுகிறது.......................................................
 
 
விண்ணைத்தாண்டிவருவாயா படத்துக்கு பிறகு நடுநிசிநாய்களால் நாறிபோன தனது இமேஜை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு கௌதம்மேனன் கையிலெடுத்திருக்கும் காதல் ஆயுதம்தான் இந்த நீ தானே என் பொன்வசந்தம்........ இளையராஜாவின் இசையில் பாடல்கள் எண்பதுகளின் சாயலில் இதமாக இருக்கிறது.................( யுவனையே மியூசிக் போட விட்டிருக்கலாம்பா............)
 
 பிரியாணி, அலெக்ஸ்பாண்டியன், ஆதிபகவன், பரதேசி,கும்கி, போடாபோடி என்று வரிசையில் காத்து கொண்டிருக்கும் படங்கள் ஏராளம்..........................

Sunday, September 9, 2012

மண்ணாங்கட்டி- தாண்டவம் முன்னோட்ட விமர்சனம் + இசை விமர்சனம்


எங்கடா தாண்டவம் விமர்சனம்னு காண்டாகி கடியாகி கமெண்ட் போட்டு மெசேஜ் போட்ட நண்பர்கள் மன்னிக்கவும்........
 

முன்னோட்ட விமர்சனம் (Trailer)
 
நம்ம டைரக்டர் விஜய்யோட அடுத்த (எந்த படத்த சுட்டாரோ) படைப்பு. இன்னும் எத்தன காலத்துக்குத்தான் கண்னு அவிஞ்சவனும் (விழிப்புலனற்றவர்களை கேலி செய்யவில்லை, அப்படி நடிப்பவர்களை மட்டுமே), ஞாபக மறதிகாரனும், அபூர்வ சகோதர குள்ளனும் பழிவாங்கிகிட்டு திரிய போறானுகளோ தெரியல.........
 
 
முன்னோட்ட (Trailer) பின்னணி இசையில் சிவதாண்டவம் பாடல் விறுவிறுப்பு. கண்தெரியாதவங்க சிலர் வௌவால் மாதிரியே எதிரொலிய வச்சே எதிரிலிருப்பதை கண்டுபிடிபாங்கனு நாசர் இலங்கைத்தமிழில் மொக்கை போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது.
 
கண் தெரியாதவனின் பழிவாங்கலும், அனுஷ்காவும் மாதவனின் “ரெண்டு” படத்தை ஞாபகப்படுத்துகிறது. ( இந்த படத்திலயாவது அனுஷ்காவ உயிரோட வையுங்கப்பா) அனுஷ்கா, எமி ஜாக்சன் அழகோ அழகு....
லண்டனில் சண்டை காட்சிகள் குண்டு வெடிப்பு காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன. விக்ரமின் நடிப்பிலும் விஜய்யின் இயக்கத்திலும் 100% நம்பிக்கை இருந்தாலும் முதல் காட்சிக்கு போவதற்கு பயமாக இருப்பது உண்மையே ( தாண்டவம் பார்க்க போனேன்.....1000 V பல்பு வாங்கி வந்தேன்னு பாட வச்சிடுவாங்களோ மாமா)
 
இசை விமர்சனம்

 
 நா.முத்துகுமாரின் எல்லா வரிகளும் அருமை..... ஜீ.வி.பிரகாஷ் எங்கிருந்து ஆட்டையை போட்டார்னு கண்டு பிடிக்கிறதுக்குள்ள மியூசிக்க மாத்திபுடுறாண்டா மாப்பிள்ளை.......
 
ஒரு பாதி கதவு  --> காதலன் காதலியை வர்ணிப்பதற்கு கதவை உவமையாக எடுத்திருப்பது புதுமை. எஸ்.ஏ.ராஜ்குமாரின் சாயல் சில இடங்களில் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. “இதயம் ஒன்றாகி போனதே, கதவே இல்லாமல் ஆனதே” வரிகளில் காதல் உணர்வு.

யாரடி மோகினி --> நல்ல பாட்டு. நம்ம ஹாரிஸ்சே சுட்டு தான் போடுவாரு (பிச்சை எடுத்ததாம் பெருமாளு, புடுங்கி திண்டதாம் அனுமாரு) அவர்ட இருந்து நம்ம ஜீ.வீ சுட்டிருகாறு. “நங்கை நிலாவின் தங்கை” ய “யாரடி மோகினி” னு கேக்குறாரு நம்ம ஜீ.வீ.

அனிச்சம் பூவழகி --> சந்திரமுகில ரெண்டு பாட்ட சுட்டு மிக்சில போட்டு அரைச்சு மியூசிக் பண்ணியிருக்காரு. “ஆ ஆ அண்ணனோட பாட்டு” பெண்குரல் தொடக்கத்தையும், “அத்திந்தோம்” பாடலையும் கலந்து கட்டி தந்திருக்காரு.
 
 அதிகாலை பூக்கள்  --> மனதை வருடும் சிறிய பாடல்.... ஜீ.வீ யின் குரலில் இளமை கொந்தளிக்கிறது.
உயிரின் உயிரே பம்பாய் தீம் மியூசிக்க அன்டணிட குடுத்து எடிட் பண்ணி பாட்ட தொடங்கிட்டார் போல. சைந்தவியின் குரலில் பாடல் மனதை வருடும் மெல்லிசை.
 
 Will you be there --> டெயிலர் ஸ்விப்ட்பிட (ஜாக்கட் தைக்குற ஆளில்லப்பா. இங்கிலிசு பாடகி) “Love Story” பாட்ட காப்பி பண்ணி ஹாரிஸ் ஜெயராஜ்ட “வாராயோ வாராயோ” தொடக்க Beatட கடன் வாங்கி (கொய்யால யார ஏமாத்துற) போட்டிருகாரு.
 
சிவ தாண்டவம் --> இந்த பாட்டு கேக்கிறதும் எங்க நைனா திட்டிறதும் ஒரே மாதிரி இருந்திச்சு. ஒண்ணுமே புரியல... ஆனா உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம். ஜீ.வீ க்கு ஒரு சபாஷ்.
 
ஜீ.வீ யின் இருபத்தைந்தாவது படம். எந்த பாடலும் சகிக்க முடியவில்லை என்ற எல்லைக்குள் செல்லவில்லை. சிலபாடல்கள் இனிமை...மற்றையவை இளமை....

மண்ணாங்கட்டி- பாகன் விமர்சனம்


தமிழ்ப் படங்களின் வருகை வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறதால ஏதாவது புதுபடம் போடுங்கப்பா வந்து பார்க்கிறோமுணு சொல்ற அளவுக்கு நம்ம நிலைமை.


ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் நீண்ட நாளைக்குப் பிறகு ஹீரோவா நடிச்சிருக்கிற படம்தான் பாகன். பாகன்னா யானைய ஓட்டுவாங்க...ஆனா நம்ம ஸ்ரீகாந்த் சைக்கிள் ஓட்டிறாரு.

பொல்லாதவனின் மோட்டார் சைக்கிளை சுத்தி கதை நகர்வதைப்போல இந்தப் படத்தில் சைக்கிளை சுத்தி கதை நகருகிறது. (இல்லப்பா கஷ்டப்பட்டு டைரக்டர் கதைய தள்ளுராறு)
ஹீரோவின் வாய்ஸில், வில்லனின் வாய்ஸில், டைரக்டரின் வாய்ஸில் கதை சொல்லி படம் பார்த்த நமக்கு சைக்கிளின் வாய்ஸில் கதை சொல்லியிருப்பது புதுமை.


ஓவர் நைட்ல ஒபாமாவாக துடிக்கும் ஹீரோ தொடங்கும் எல்லா பிஸ்னசும் புட்டுக்க, பணக்கார பொண்ண  லவ் பண்ணி வாழ்க்கைல செட்டில் ஆவம்னு ஊர்ல உள்ள பெரிய தாதா பொண்ண லவ் பண்றாரு நம்ம ஸ்ரீகாந்த். அவளோட நைனா காதுக்கு லவ் மேட்டர் போக வீட்ட விட்டே ஓடி வந்திடுறா நம்ம ஹீரோயின். அவளோட அப்பங்காரன் துரத்திட்டு வர, பணந்தான் முக்கியம் நீ இல்லன்னு சொல்லி ஹீரோயின கழட்டி விட்டிட்டு தப்பிகிறாரு நம்ம ஹீரோ. இதற்கு பிறகு என்ன நடக்கிறதெங்கிறதே கதை.....

“மனம் கொத்தி பறவை”குள்ள சைக்கிள விட்டு ஏத்தி படம் எடுதிருக்காரு டைரக்டரு அஸ்லம். கதைக்கு சம்பந்தமே இல்லாம தொடக்கத்தில் தோன்றி கடைசியில் வெடித்து சிதறுகிறது சைக்கிள். (நம்ம மண்டையும் தான்)

ஸ்ரீகாந்தின் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார். படத்தின் மிகப்பெரிய ஆறுதல் பாராட்டா சூரியும், பிளக் பாண்டியும் தான். “வடக்கு பக்கம் போகாத.... வடக்கு பக்கம் போகாத..... எண்டு சொன்னியே, கிணத்து பக்கம் போகாத எண்டு சொன்னியா”, என்று சூரி கேட்கும் போது தியேட்டர் முழுவதும் சிரிப்பலை. நாடகத்தனமான நகைச்சுவைகள் சிரிக்க விடாமல் கடுப்பாக்குகின்றன.


சின்ன பட்ஜெட் படம் என்ற காரணத்தால் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. ஜேம்ஸ் வசந்தனின் இசை மனதுக்கு இதம். இறுதியாக அறிமுக டைரக்டர் அஸ்லமிடம் ஒரு கேள்வி.....

படக்கதைக்கும் திரைக்கதைக்கும் கதைக்களத்திற்கும் சம்பந்தமே இல்லாம படம் எடுக்கிறதுக்கு யாருப்பா சொல்லிதந்தது????

Saturday, September 8, 2012

முகமூடி- சூப்பர் (சப்ப) ஹீரோ விமர்சனம்


வணக்கம் நண்பர்களே,

“காதல் எங்கிறது காலைக்கடன் மாதிரி ....... அடக்கி வச்சாலும் பிரச்சனை.... அடிக்கடி வந்தாலும் பிரச்சனை....”


இப்ப என்ன இழவுக்கு தத்துவம் சொல்றான்னு காண்டாகாதிங்க........
தமிழ் சினிமாட முதல் சூப்பர் ஹீரோ படமாம். ( அப்போ நம்ம விஜயகாந்த் படமெல்லாம் சூப்பர் ஹீரோ படம் இல்லையா??? )
கந்தசாமி, வேலாயுதம், ஆழ்வார் எல்லாம் பார்த்து நொந்து போன தமிழ் ரசிகர்களுக்கு இது ஒன்னும் அவ்ளோ பெரிய மொக்க படம் இல்லை. மிஷ்கின் தன்னோட கனவு படம் கனவு படமுன்னு சொன்னாரு ( அவன் கனவில தீய வைக்க)
Mishkin


நம்ம தமிழ் சினிமாவில இருக்கிற முக்கியமான பிரச்சனை இங்கிலீஷ் படத்த காப்பி அடிச்சு உலக சினிமான்னு பீலா விடுறது...... ப்ருஸ் லீ படங்கள காப்பி அடிச்சு ஒரு ஹீரோ, பாட்மான் ஜோக்கர காப்பி அடிச்சு ஒரு வில்லன்..... “பைரேட்ஸ் ஒப் தே கரிபியன்” படத்த காப்பி அடிச்சு ஒரு கிளைமாக்சு........
படம் முடிஞ்சு போச்சு...


இப்பிடி படம் எடுத்ததுக்கு நம்ம ராணி காமிக்ஸ் முகமூடி “மாயாவி” கதையையே எடுத்திருக்கலாம்....... மிஷ்கின மட்டும் பிழை சொல்ல முடியாது...... தமிழ் ரசிகர்களாகிய எங்கிட்டயும் பேஜர் இருக்கு..... நம்ம சூப்பர் ஹீரோனா மந்திரத்தால பறக்கணும்... இல்லைனா குருவிய பார்த்து கும்பிட்டிட்டு பறக்கணும்... (???) வேற்று கிரகவாசி, விஞ்ஞான கற்பனைகள் எதையுமே ஏத்துகிறது கிடையாது.


.சரி இப்ப கதைக்கு போவோம்... ஒரு மாஸ்டர் கிட்ட குங்க்பு கத்துகிறாரு நம்ம ஹீரோ ஜீவா..... சும்மா சொல்லக்கூடாது, பறந்து பறந்து பைட் பண்ணுறாரு.( நம்ம பைட் மாஸ்டருக்கு ஒரு சலாம் ) ஹீரோயின் அறிமுக காட்சியில் புதுமை செய்யிறேன்னு சொல்லி உலக மகா காமடி பண்ணியிருக்காரு டைரக்டரு...... வாயமூடி சும்மா இருடா பாடலின் இசையும் கார்க்கியின் வரிகளும் இனிமை...... பாடலின் தொடக்கத்தில் என்ன பொண்ணுடா என ஹீரோ சொல்ல, பொண்ணாடா இது, பிட்டு படத்தில வாற ஆண்டி மாதிரி இருக்குன்னு சொல்லி ரசிகர்கள் கொந்தளித்ததை என்னன்னு சொல்ல... அவ் அவ் அவ்......




ஒவ்வொரு படத்திலயும் ஹீரோயின் ஹீரோட பைட்ட பாத்திருப்பா, இல்லைனா ஸ்டைல்ல பாத்திருப்பா, இல்லைனா முகத்த பாத்திருப்பா (பவர் ஸ்டார் கூட விதி விலக்கில்ல) கொய்யால ஹீரோ உச்சா போறத பார்த்தது இந்த படத்திலதான்...


நரேன் நல்ல நடிகர் எண்டு ஊருக்கே தெரியும்.... ஆனா ஓவர் ஆக்டிங் பண்ணி உசிர எடுபார்னு இப்ப தான் தெரிஞ்சிது...... அந்த பிளாஷ்பேக் சீனுகாகவே நம்ம மிஷ்கினுக்கு தனியாக ஒரு கொடும்பாவி எரிக்கலாம்...


முதல்ல பைட்ட நம்பி படமெடுக்க கிளம்பினாரு டைரக்டரு.... காதல் இல்லைன்னு ஹீரோயின கூப்பிடாரு..... வில்லன் இல்லைன்னு நரேனை கூப்பிடாரு..... செண்டிமெண்ட் இல்லைன்னு குங்க்பு மாஸ்டரை போட்டு தள்ளினாறு....... குழந்தைகள் பார்க்கணும்னு சூப்பர் ஹீரோ காஸ்டியும் போட்டு விட்டாரு.......( கொய்யால ! படத்தில கதையே இல்லையே அத பத்தி கொஞ்சமாவது யோசிச்சாரா )

மொத்தத்தில் முகமூடி பார்க்க போனவர்களுக்கு – குல்லா