Monday, November 12, 2012










துப்பாக்கி நடுநிலை விமர்சனம் கீழே சொடுக்கவும்  ::


                                                   துப்பாக்கி விமர்சனம் 













துப்பாக்கி - மண்ணாங்கட்டி விமர்சனம்







விமர்சனத்தை வாசிக்க கீழே சொடுக்குங்கள்

மண்ணாங்கட்டி -துப்பாக்கி விமர்சனம்























Saturday, October 13, 2012

மண்ணாங்கட்டி- மாற்றான் - விமர்சனம்




வணக்கம் நண்பர்களே....................................


இனி இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம்................தீவிரவாதிகள்ட்ட இருந்து தேசத்தைப் பாதுகாக்க விஜயகாந்த் இருப்பதைப்போல, விஞ்ஞானிகள்ட்ட இருந்து நாட்டைப் பாதுகாக்க நம்ம சூரியா இருக்காரு...............


படம் ஆரம்பித்த போதே ஜெனடிக், ஜீனுன்னு பில்டப் பண்ண எனக்கு ஏதோ ஏழாம் அறிவு Part 2 பார்க்கும் உணர்வு............ முக்கிய குறிப்பு – சூரியாவின்

தீவிர ரசிகர்கள் தயவுசெய்து கீழே படித்து காண்டாகாதீர்கள்..................
தள தள காஜல், நல்ல ஒளிப்பதிவு, விதவிதமான லொக்கேஷன் இதைத்தவிர படத்தில் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை............

“Stuck on you”, “Alone” (அதாம்பா சாருலதா படத்தோட ஒரிஜினல்) படங்களோட கருவை எடுத்து நம்ம ஜீவாட ”ஈ“ படத்தை இடைல சொருகி உக்ரேய்ன் நாட்டில சூர்யாவையும் காஜலையும் ஓட விட்டு ( தியட்டர்ல இருந்து நம்மளையும் தான் ) படமெடுத்தா அதுக்கு பேரு மாற்றானாம்............... 

படத்தின் முன்பாதி சூப்பர்...... பின்பாதிதான் கொஞ்சம் இழுவைனு எவண்டா புரளிய கிளப்பி விட்டது???????? முன்னாடி பின்னாடி நடுவில சைடுல எல்லாம் ஒரே மாதிரி எழவுதான்................ கே.வீ.ஆனந்த் சார்ட்ட மறுபடியும் ஒரு கேள்வி....... (http://www.facebook.com/photo.php?fbid=295912217174174&set=pb.285940164838046.-2207520000.1350131548&type=1&theater) நீங்க எதுக்கு சூர்யாவ ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களா காட்டிணீங்க?????? கதைக்கு அது தேவையா......... அல்லது ஒட்டிப் பிறந்தவங்கன்னு வச்சுகிட்டு அதுக்கப்புறம் கதைய தேடிப் பிடிச்சிங்களா?????? (உக்ரேய்ன் வரைக்கும் போய் கதை தேடியிருக்கார் நம்ம டைரக்டர்......).........................

அலுப்பு தட்டும் ஆக்ஷன் சீன்ஸ், சட்டியில் அகப்பையை தட்டுவது போன்ற Background மியூசிக், மொக்கை நடன அமைப்புக்கள், கதைக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகள், கதாபாத்திரங்கள், சூர்யாவின் மொக்கை காமடிகள், லாஜிக்?????? (லாஜிக்கை கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்) பார்க்க வேண்டுமானால் மாற்றான் படத்திற்கு உடனே செல்லவும்.....................

சூர்யாவிடம் ஒரு கேள்வி............... டைரக்டர் கிட்ட சட்டைய கழட்டி உடம்ப காட்டிற சீன் இருந்தா மட்டும்தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சீங்களாமே. உண்மையா????????? (நம்ம நேபாளி பரத்தே sixpacks எடுத்திட்டானாம்.... இனி உங்க பப்பு வேகாது மாமா)

 காஜலிடம் ஒரு கேள்வி................ உங்களுக்கு பிரெஞ்சு தெரிது...... இங்கிலீஷ் தெரிது......... நல்ல படங்களை செலக்ட் பண்ண தெரியலையா???????

ஹாரிஸ் ஜெயராஜிடம் ஒரு கேள்வி................ உங்ககிட்ட என்னத்த கேட்கிறது????? இனிமேலாவது படங்களுக்கு சொந்தமா மியூசிக் போட யோசிங்க......................
இந்தக்கதை எடுக்கிறதுக்கு பதிலா “Stuck on you” படத்தோட கதைய (http://www.facebook.com/photo.php?fbid=293796530719076&set=pb.285940164838046.-2207520000.1350133689&type=1&theater) எடுத்திருந்தாலாவது ஜாலியா பாத்திட்டு வந்திருக்கலாம்................
கடைசி சீன்ல நீ floppu….. நீ floppuன்னு சூர்யாவின் அப்பங்காரன் சொல்லும்போது படமும் floppu தாண்டா என்று ரசிகர்களின் கூச்சல் எதிரொலித்ததில் தெரிந்தது பெரும்பாலானவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று.......................................
மொத்தத்தில் மாற்றான்---- நீங்களும் போய் மாட்டிகாதிங்க..............







Friday, September 28, 2012

தாண்டவம்- மண்ணாங்கட்டி விமர்சனம்

வணக்கம் நண்பர்களே!




முதலில் யாரோ ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் கதை தன்னோடதெண்னு கோட்டுல கேஸ் எல்லாம் போட்டான். கொய்யால கஜினி பட கதைய சுட்டானு முருகதாஸ் கேஸ் போட்டிருக்கலாம்....... இல்லைனா ரெண்டு பட கதைய சுட்டானு சுந்தர் சீ கேஸ் போட்டிருக்கலாம்................ நீயேண்டா கேஸ் போட்ட மன்கூஸ் மண்டையா.......................


இதுவரைக்கும் இங்கிலிசு படங்கள சுட்டு படமெடுத்த நம்ம டைரக்டர் விஜய் நாலைஞ்சு தமிழ் படங்கள சுட்டு படமெடுத்திருக்காரு.................. படம் கஜினி படம்போல சம்பந்தமே இல்லாமல் ஒரு கொலையோடு ஆரம்பமாகிறது........... பிறகு சம்பந்தமே இல்லாம எமி ஜாக்சன் ஒரு பாடு பாடிகிட்டே என்ட்ரி ஆகிறாங்க.........காரணமே இல்லாம விக்ரம லவ் பண்றாங்க............. விக்ரம் பண்ணும் கொலைகளுக்கு சம்பந்தமே இல்லாம சந்தானம் மாட்டிக்கொள்ள என்ன இழவுடா என்று ரசிகர்கள் யோசிக்கும் போது பிளாஷ்பேக்கில் அனுஷ்கா விக்ரமை திருமணம் செய்து லண்டன வந்து செத்துப்போக, டைரக்டர் கோ படத்திலிருந்து டுவிஸ்டை சுட்டு நம்மள சாகடிக்க......... கொலைக்கு காரணமானவர்களை விக்ரம் பழிவாங்க படம் முடிஞ்சு .......எ பிலிம் பை விஜய்னு டைட்டில்ல போட அவ்வளவு நேரம் அமைதியா இருந்த ரசிகர்கள் இனியாவது படத்த போடுங்கடா என்னு காண்டாகி கத்தினார்கள்.................



விக்ரமுக்கு வயசு போய்விட்டது அவரது கண்களில் நன்றாகவே தெரிந்தது.............ஆனால் வயது உடம்பிலோ நடிப்பிலோ கொஞ்சமும் தெரியவில்லை.......... தனி ஆளாக பல இடங்களில் தாண்டவம் ஆடியிருக்கிறார்......... அதற்கு பொருத்தமாக ஆன்டி அனுஷ்கா அழகாக இருக்கிறார்........இரண்டு பாட்டுக்களை பாடுறதுக்கு மட்டும் எமி ஜாக்சன்.... வேற எதையும் அவர் உருப்படியாக செய்யவில்லை..............
 ஹீரோவுடன் கௌண்டர் அடிப்பதற்கு சரியான வாய்ப்பு இல்லாததால் சந்தானத்தின் காமடிகள் கஞ்சா கருப்பின் காமிடி போல இருந்தது ................
வழமை போல ஜீ வீ பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று.......
விஜயின் திரைக்கதை தன்னுடைய முன்னைய படங்களைப்போல ஆமை வேகத்தில் இருப்பது த்ரில்லர் படத்திற்கு கொஞ்சமும் பொருந்தவில்லை......................குத்துப்பாட்டு இருக்க வேண்டிய இடத்தில் தாலாட்டு பாடியது போல் இருந்தது.......................



கடைசிக்காட்சியில் நாலு கொலை செய்தாலும் ஐந்து கொலை செய்தாலும் ஒரே தண்டனை தான் என்று நாசர் விக்ரமை கொலை செய்ய விட்டுவிட்டு வெளியில் காத்திருப்பது பக்கா நாடகத்தனம்................
பட்ஜெட்டை குறைப்பதற்கு பாடல்களை பயன்படுத்தியிருப்பது நன்றாக தெரிகிறது.............. ஆனால் காட்சிப்படுத்திய விதம் நன்றாக இருந்தது...... 
எவ்வளவு தான் குறைகள் இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு லண்டனை புதுமையாக காட்டுகிறது.............. சண்டைக் காட்சிகளை நீட்டாமல் விட்டதற்கு விஜய்க்கு ஒரு நன்றி................ குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய படமென்றாலும் நண்பர்களோடு விசிலடித்து பார்க்க விரும்புபவர்கள் கொஞ்சம்......................................... ஏதோ உங்க விருப்பப்படி செய்யுங்கப்பா............................
மொத்தத்தில் தாண்டவம் ........ விக்ரம் மட்டுமே ஆடியிருக்கும் சிவதாண்டவம் .............
 

மேலும் விமர்சனங்களுக்கு .............. கீழுள்ள Facebook பக்கத்தை Like செய்யவும்........
மண்ணாங்கட்டி விமர்சனங்கள் 









Wednesday, September 19, 2012

மண்ணாங்கட்டி -வரப்போகும் திரைப்படங்கள்- ஒரு பார்வை



வணக்கம் நண்பர்களே,
 


தமிழ் படங்கள் இல்லாமல் காஞ்சு கருவாடா போயிருக்கும் எங்களுக்கு வரப்போற படங்கள பத்தி பேசியாவது சந்தோசப்படுவம் மாப்புள்ள.........


 


இந்தவருஷம் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார்ட கொச்சடையான் ரிலீஸ்...... நம்ம தலைவர்ட மகள் சௌந்தர்யா இயக்கும் படம்....... ( உங் கொக்கா மூணு மூணுனு ஒரு படம் எடுத்தாளே..... அத ஒரு தடவ கூட பார்க்க முடியல...... இதுல மண்ணாங்கட்டிய வேற விமர்சனம் எழுதச்சொல்லி பலபேர் கேக
்குறாய்ங்க......) தலைவர் Black & White காலத்தில வந்தாலே விசில் பறக்கும்..... அனிமேஷன்ல வாராரு... என்னாக போகுதோ...... ஆனா சில மறுக்க முடியாத உண்மைகள சொல்லியே ஆகணும்..... தலைவர் படம்னு சொன்ன போதிலும் தலைவர்ட முந்திய படங்கள விட கொச்சடையானுக்கு எதிர்பார்ப்பு குறைவு................................................................................................
 
 
கமல் சாரு படம்னாலே ஏதாவது வித்தியாசமா சொல்ல வருவாரு........ (புரியிறது புரியாதது வேற விஷயம்) பிரமாண்டமான ஒரு படம்னு Trailer இல் தெரிந்தாலும், ஆப்கானிஸ்தானுக்கும் பரதநாட்டியத்துக்கும் என்ன சம்பந்தம்னு சுத்தமா புரியல................. அனிருத்தோடு முத்தமிட்ட (ஒருவேளை நம்ம கமல் தான் சொல்லி குடுத்தாரோ) புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரியா (ஆன்டி) ஹீரோயினா நடிக்கிறாரு......... “இவன் யாரென்று தெரிகிறதா” பாடல், பாடல் தொகுப்பு வெளிவர முன்னமே பாடல்களுக்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது...................................................................
 
 
துப்பாக்கின்னு ஏன் தான் பேர் வச்சோம்னு முருகதாசும் விஜய்யும் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கும் படம்............ Teaser ஐ வெளியிடவே பெரும் சிக்கலாக இருந்தும் கூட படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.............. படத்தின் கதை என்னவென்று ஊகிக்கமுடியாத நிலையில் (மண்ணாங்கட்டில போட்டிருக்கோம்ல- துப்பாக்கியின் கதை) பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.....................................................................................
 
 
மாற்றான் பாடல்களை என்னதான் கேவலப்படுத்தினாலும் (மாற்றான் இசை விமர்சனம் ) ஹாரிஸ் மியூசிக் எங்கிறது தனுஷ் மாதிரி......... பாட்ட கேட்ட உடன பிடிக்காது........... கேட்க கேட்க தான் பிடிக்கும்........... தீயே தீயே, நானி கோனி பாடல்கள் இப்போதைய இளைஞர்களின் Ringtoneகள். ......................................................
 
 
அடுத்த வாரம் வெளியாகப்போகும் தாண்டவம் (தாண்டவம் பாடல் விமர்சனம்-தாண்டவம் இசை, முன்னோட்ட விமர்சனம் ) விக்ரம் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல பேருடைய எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது......................... விஜயின் இயக்கத்தில் கிரீடம், மதராசப்பட்டினம்,தெய்வத்திருமகள் என்று வித்தியாசமான (இங்கிலீசு படங்கள்ல சுட்டது தானே.........) கதையம்சங்கள் வெளிவந்த படங்களின் வரிசையில் இதுவும் அமையுமென நினைக்கத்தோன்றுகிறது.......................................................
 
 
விண்ணைத்தாண்டிவருவாயா படத்துக்கு பிறகு நடுநிசிநாய்களால் நாறிபோன தனது இமேஜை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு கௌதம்மேனன் கையிலெடுத்திருக்கும் காதல் ஆயுதம்தான் இந்த நீ தானே என் பொன்வசந்தம்........ இளையராஜாவின் இசையில் பாடல்கள் எண்பதுகளின் சாயலில் இதமாக இருக்கிறது.................( யுவனையே மியூசிக் போட விட்டிருக்கலாம்பா............)
 
 பிரியாணி, அலெக்ஸ்பாண்டியன், ஆதிபகவன், பரதேசி,கும்கி, போடாபோடி என்று வரிசையில் காத்து கொண்டிருக்கும் படங்கள் ஏராளம்..........................

Sunday, September 9, 2012

மண்ணாங்கட்டி- தாண்டவம் முன்னோட்ட விமர்சனம் + இசை விமர்சனம்


எங்கடா தாண்டவம் விமர்சனம்னு காண்டாகி கடியாகி கமெண்ட் போட்டு மெசேஜ் போட்ட நண்பர்கள் மன்னிக்கவும்........
 

முன்னோட்ட விமர்சனம் (Trailer)
 
நம்ம டைரக்டர் விஜய்யோட அடுத்த (எந்த படத்த சுட்டாரோ) படைப்பு. இன்னும் எத்தன காலத்துக்குத்தான் கண்னு அவிஞ்சவனும் (விழிப்புலனற்றவர்களை கேலி செய்யவில்லை, அப்படி நடிப்பவர்களை மட்டுமே), ஞாபக மறதிகாரனும், அபூர்வ சகோதர குள்ளனும் பழிவாங்கிகிட்டு திரிய போறானுகளோ தெரியல.........
 
 
முன்னோட்ட (Trailer) பின்னணி இசையில் சிவதாண்டவம் பாடல் விறுவிறுப்பு. கண்தெரியாதவங்க சிலர் வௌவால் மாதிரியே எதிரொலிய வச்சே எதிரிலிருப்பதை கண்டுபிடிபாங்கனு நாசர் இலங்கைத்தமிழில் மொக்கை போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது.
 
கண் தெரியாதவனின் பழிவாங்கலும், அனுஷ்காவும் மாதவனின் “ரெண்டு” படத்தை ஞாபகப்படுத்துகிறது. ( இந்த படத்திலயாவது அனுஷ்காவ உயிரோட வையுங்கப்பா) அனுஷ்கா, எமி ஜாக்சன் அழகோ அழகு....
லண்டனில் சண்டை காட்சிகள் குண்டு வெடிப்பு காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன. விக்ரமின் நடிப்பிலும் விஜய்யின் இயக்கத்திலும் 100% நம்பிக்கை இருந்தாலும் முதல் காட்சிக்கு போவதற்கு பயமாக இருப்பது உண்மையே ( தாண்டவம் பார்க்க போனேன்.....1000 V பல்பு வாங்கி வந்தேன்னு பாட வச்சிடுவாங்களோ மாமா)
 
இசை விமர்சனம்

 
 நா.முத்துகுமாரின் எல்லா வரிகளும் அருமை..... ஜீ.வி.பிரகாஷ் எங்கிருந்து ஆட்டையை போட்டார்னு கண்டு பிடிக்கிறதுக்குள்ள மியூசிக்க மாத்திபுடுறாண்டா மாப்பிள்ளை.......
 
ஒரு பாதி கதவு  --> காதலன் காதலியை வர்ணிப்பதற்கு கதவை உவமையாக எடுத்திருப்பது புதுமை. எஸ்.ஏ.ராஜ்குமாரின் சாயல் சில இடங்களில் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. “இதயம் ஒன்றாகி போனதே, கதவே இல்லாமல் ஆனதே” வரிகளில் காதல் உணர்வு.

யாரடி மோகினி --> நல்ல பாட்டு. நம்ம ஹாரிஸ்சே சுட்டு தான் போடுவாரு (பிச்சை எடுத்ததாம் பெருமாளு, புடுங்கி திண்டதாம் அனுமாரு) அவர்ட இருந்து நம்ம ஜீ.வீ சுட்டிருகாறு. “நங்கை நிலாவின் தங்கை” ய “யாரடி மோகினி” னு கேக்குறாரு நம்ம ஜீ.வீ.

அனிச்சம் பூவழகி --> சந்திரமுகில ரெண்டு பாட்ட சுட்டு மிக்சில போட்டு அரைச்சு மியூசிக் பண்ணியிருக்காரு. “ஆ ஆ அண்ணனோட பாட்டு” பெண்குரல் தொடக்கத்தையும், “அத்திந்தோம்” பாடலையும் கலந்து கட்டி தந்திருக்காரு.
 
 அதிகாலை பூக்கள்  --> மனதை வருடும் சிறிய பாடல்.... ஜீ.வீ யின் குரலில் இளமை கொந்தளிக்கிறது.
உயிரின் உயிரே பம்பாய் தீம் மியூசிக்க அன்டணிட குடுத்து எடிட் பண்ணி பாட்ட தொடங்கிட்டார் போல. சைந்தவியின் குரலில் பாடல் மனதை வருடும் மெல்லிசை.
 
 Will you be there --> டெயிலர் ஸ்விப்ட்பிட (ஜாக்கட் தைக்குற ஆளில்லப்பா. இங்கிலிசு பாடகி) “Love Story” பாட்ட காப்பி பண்ணி ஹாரிஸ் ஜெயராஜ்ட “வாராயோ வாராயோ” தொடக்க Beatட கடன் வாங்கி (கொய்யால யார ஏமாத்துற) போட்டிருகாரு.
 
சிவ தாண்டவம் --> இந்த பாட்டு கேக்கிறதும் எங்க நைனா திட்டிறதும் ஒரே மாதிரி இருந்திச்சு. ஒண்ணுமே புரியல... ஆனா உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம். ஜீ.வீ க்கு ஒரு சபாஷ்.
 
ஜீ.வீ யின் இருபத்தைந்தாவது படம். எந்த பாடலும் சகிக்க முடியவில்லை என்ற எல்லைக்குள் செல்லவில்லை. சிலபாடல்கள் இனிமை...மற்றையவை இளமை....

மண்ணாங்கட்டி- பாகன் விமர்சனம்


தமிழ்ப் படங்களின் வருகை வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறதால ஏதாவது புதுபடம் போடுங்கப்பா வந்து பார்க்கிறோமுணு சொல்ற அளவுக்கு நம்ம நிலைமை.


ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் நீண்ட நாளைக்குப் பிறகு ஹீரோவா நடிச்சிருக்கிற படம்தான் பாகன். பாகன்னா யானைய ஓட்டுவாங்க...ஆனா நம்ம ஸ்ரீகாந்த் சைக்கிள் ஓட்டிறாரு.

பொல்லாதவனின் மோட்டார் சைக்கிளை சுத்தி கதை நகர்வதைப்போல இந்தப் படத்தில் சைக்கிளை சுத்தி கதை நகருகிறது. (இல்லப்பா கஷ்டப்பட்டு டைரக்டர் கதைய தள்ளுராறு)
ஹீரோவின் வாய்ஸில், வில்லனின் வாய்ஸில், டைரக்டரின் வாய்ஸில் கதை சொல்லி படம் பார்த்த நமக்கு சைக்கிளின் வாய்ஸில் கதை சொல்லியிருப்பது புதுமை.


ஓவர் நைட்ல ஒபாமாவாக துடிக்கும் ஹீரோ தொடங்கும் எல்லா பிஸ்னசும் புட்டுக்க, பணக்கார பொண்ண  லவ் பண்ணி வாழ்க்கைல செட்டில் ஆவம்னு ஊர்ல உள்ள பெரிய தாதா பொண்ண லவ் பண்றாரு நம்ம ஸ்ரீகாந்த். அவளோட நைனா காதுக்கு லவ் மேட்டர் போக வீட்ட விட்டே ஓடி வந்திடுறா நம்ம ஹீரோயின். அவளோட அப்பங்காரன் துரத்திட்டு வர, பணந்தான் முக்கியம் நீ இல்லன்னு சொல்லி ஹீரோயின கழட்டி விட்டிட்டு தப்பிகிறாரு நம்ம ஹீரோ. இதற்கு பிறகு என்ன நடக்கிறதெங்கிறதே கதை.....

“மனம் கொத்தி பறவை”குள்ள சைக்கிள விட்டு ஏத்தி படம் எடுதிருக்காரு டைரக்டரு அஸ்லம். கதைக்கு சம்பந்தமே இல்லாம தொடக்கத்தில் தோன்றி கடைசியில் வெடித்து சிதறுகிறது சைக்கிள். (நம்ம மண்டையும் தான்)

ஸ்ரீகாந்தின் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார். படத்தின் மிகப்பெரிய ஆறுதல் பாராட்டா சூரியும், பிளக் பாண்டியும் தான். “வடக்கு பக்கம் போகாத.... வடக்கு பக்கம் போகாத..... எண்டு சொன்னியே, கிணத்து பக்கம் போகாத எண்டு சொன்னியா”, என்று சூரி கேட்கும் போது தியேட்டர் முழுவதும் சிரிப்பலை. நாடகத்தனமான நகைச்சுவைகள் சிரிக்க விடாமல் கடுப்பாக்குகின்றன.


சின்ன பட்ஜெட் படம் என்ற காரணத்தால் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. ஜேம்ஸ் வசந்தனின் இசை மனதுக்கு இதம். இறுதியாக அறிமுக டைரக்டர் அஸ்லமிடம் ஒரு கேள்வி.....

படக்கதைக்கும் திரைக்கதைக்கும் கதைக்களத்திற்கும் சம்பந்தமே இல்லாம படம் எடுக்கிறதுக்கு யாருப்பா சொல்லிதந்தது????

Saturday, September 8, 2012

முகமூடி- சூப்பர் (சப்ப) ஹீரோ விமர்சனம்


வணக்கம் நண்பர்களே,

“காதல் எங்கிறது காலைக்கடன் மாதிரி ....... அடக்கி வச்சாலும் பிரச்சனை.... அடிக்கடி வந்தாலும் பிரச்சனை....”


இப்ப என்ன இழவுக்கு தத்துவம் சொல்றான்னு காண்டாகாதிங்க........
தமிழ் சினிமாட முதல் சூப்பர் ஹீரோ படமாம். ( அப்போ நம்ம விஜயகாந்த் படமெல்லாம் சூப்பர் ஹீரோ படம் இல்லையா??? )
கந்தசாமி, வேலாயுதம், ஆழ்வார் எல்லாம் பார்த்து நொந்து போன தமிழ் ரசிகர்களுக்கு இது ஒன்னும் அவ்ளோ பெரிய மொக்க படம் இல்லை. மிஷ்கின் தன்னோட கனவு படம் கனவு படமுன்னு சொன்னாரு ( அவன் கனவில தீய வைக்க)
Mishkin


நம்ம தமிழ் சினிமாவில இருக்கிற முக்கியமான பிரச்சனை இங்கிலீஷ் படத்த காப்பி அடிச்சு உலக சினிமான்னு பீலா விடுறது...... ப்ருஸ் லீ படங்கள காப்பி அடிச்சு ஒரு ஹீரோ, பாட்மான் ஜோக்கர காப்பி அடிச்சு ஒரு வில்லன்..... “பைரேட்ஸ் ஒப் தே கரிபியன்” படத்த காப்பி அடிச்சு ஒரு கிளைமாக்சு........
படம் முடிஞ்சு போச்சு...


இப்பிடி படம் எடுத்ததுக்கு நம்ம ராணி காமிக்ஸ் முகமூடி “மாயாவி” கதையையே எடுத்திருக்கலாம்....... மிஷ்கின மட்டும் பிழை சொல்ல முடியாது...... தமிழ் ரசிகர்களாகிய எங்கிட்டயும் பேஜர் இருக்கு..... நம்ம சூப்பர் ஹீரோனா மந்திரத்தால பறக்கணும்... இல்லைனா குருவிய பார்த்து கும்பிட்டிட்டு பறக்கணும்... (???) வேற்று கிரகவாசி, விஞ்ஞான கற்பனைகள் எதையுமே ஏத்துகிறது கிடையாது.


.சரி இப்ப கதைக்கு போவோம்... ஒரு மாஸ்டர் கிட்ட குங்க்பு கத்துகிறாரு நம்ம ஹீரோ ஜீவா..... சும்மா சொல்லக்கூடாது, பறந்து பறந்து பைட் பண்ணுறாரு.( நம்ம பைட் மாஸ்டருக்கு ஒரு சலாம் ) ஹீரோயின் அறிமுக காட்சியில் புதுமை செய்யிறேன்னு சொல்லி உலக மகா காமடி பண்ணியிருக்காரு டைரக்டரு...... வாயமூடி சும்மா இருடா பாடலின் இசையும் கார்க்கியின் வரிகளும் இனிமை...... பாடலின் தொடக்கத்தில் என்ன பொண்ணுடா என ஹீரோ சொல்ல, பொண்ணாடா இது, பிட்டு படத்தில வாற ஆண்டி மாதிரி இருக்குன்னு சொல்லி ரசிகர்கள் கொந்தளித்ததை என்னன்னு சொல்ல... அவ் அவ் அவ்......




ஒவ்வொரு படத்திலயும் ஹீரோயின் ஹீரோட பைட்ட பாத்திருப்பா, இல்லைனா ஸ்டைல்ல பாத்திருப்பா, இல்லைனா முகத்த பாத்திருப்பா (பவர் ஸ்டார் கூட விதி விலக்கில்ல) கொய்யால ஹீரோ உச்சா போறத பார்த்தது இந்த படத்திலதான்...


நரேன் நல்ல நடிகர் எண்டு ஊருக்கே தெரியும்.... ஆனா ஓவர் ஆக்டிங் பண்ணி உசிர எடுபார்னு இப்ப தான் தெரிஞ்சிது...... அந்த பிளாஷ்பேக் சீனுகாகவே நம்ம மிஷ்கினுக்கு தனியாக ஒரு கொடும்பாவி எரிக்கலாம்...


முதல்ல பைட்ட நம்பி படமெடுக்க கிளம்பினாரு டைரக்டரு.... காதல் இல்லைன்னு ஹீரோயின கூப்பிடாரு..... வில்லன் இல்லைன்னு நரேனை கூப்பிடாரு..... செண்டிமெண்ட் இல்லைன்னு குங்க்பு மாஸ்டரை போட்டு தள்ளினாறு....... குழந்தைகள் பார்க்கணும்னு சூப்பர் ஹீரோ காஸ்டியும் போட்டு விட்டாரு.......( கொய்யால ! படத்தில கதையே இல்லையே அத பத்தி கொஞ்சமாவது யோசிச்சாரா )

மொத்தத்தில் முகமூடி பார்க்க போனவர்களுக்கு – குல்லா

Wednesday, August 29, 2012

மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள் (நான்,அட்டக்கத்தி,மிரட்டல்,18 வயசு)



வணக்கம்பா ,
 
இவளவு நாளா இன்னா பண்ணிகின்னு இருந்தான்.இம்புட்டு படம் வந்திருக்கு , பாட்டு வந்திருக்கு இவன் இன்னான்னா ஒண்ணுக்கும் விமர்சனம் எழுதலன்னு கடுப்பகியவர்கள் மன்னிக்கவும். “தாண்டவம்” பாடல் வந்து பல நாள் ஆகிவிட்ட காரணத்தால் எழுத முடியவில
்லை (எழுத வேண்டும் என்றால் கமண்டில் சொல்லுங்க).கடைசியா நான் பார்த்த நான்கு படங்களின் மொக்கை பட வரிசை இதோ :
நான்  : விஜய் அன்டனி நடிகராக, தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்! இருக்கிற மொக்க ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு போதும் நீங்களும் ஏன் வாரிங்கன்னு? கேக்க தோன்றிய படம்! உள்ளே போகும் போது போகனுமா? இல்ல! எஸ்கேப் ஆகி ஓடி வந்திரு கைப்புள்ளன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல். சரி எத்தினி மொக்கப்படம் பாத்திருப்பம் அதுல இதுவும் ஒண்ணா இருந்துட்டு போகுதுன்னு உள்ள போனா!...............

சூப்பரப்பு இன்னா நடிப்பு இன்னா மியூசிக் இன்னா டையரக்ஷன்! படம் முழுவதும் திருப்பங்கள். எப்பிடி முடிக்க போகிறார்கள் என்று கடைசிவரை கணிக்க முடியவில்லை.”ஆள்மாறாட்டம்” அதுதான் கதை ஆனால் சொன்னவிதம், சொன்ன காரணங்கள் அருமை.கடைசியில் தொடரும் என்று முடித்திருப்பது சிறப்பு. விஜய் ஆண்டனியின் முகம் கதாபாத்திரத்துக்கு கனகட்சிதம். நல்ல படம் என்ற காரணத்தால் மொக்கை படவரிசையில் கடைசி இடமான நாலாவது இடத்தில்.மொத்தத்தில் “நான்” – வீண் இல்லை!

அட்டக்கத்தி – இது போன்ற கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு ஆனால் நம்ம அன்றாட வாழ்கையில் பார்ப்பது தான். “திரிஷா போன திவ்யா ”என்று ஊரை சுற்று எங்களை போன்றவர்களை அப்பட்டமாக படம்பிடித்து காட்டியிருக்கிறார்கள்.”ஆடி போனா ஆவணி ” கானா பாடல் காதுகளுக்கு இனிமை! கதை என்று சொல்வதற்கு எதுக்கும் இல்லை ஒவ்வொரு இளைஞனும் தன்னை தானே திரையில் பார்க்கலாம். காதலில் தோத்தா முகத்த சொகமா வைச்சிருக்க்னுன்னு கஷ்டப்பட்டு சோகத்தை முகத்தில் காட்ட முயன்று முடியாமல் சிரிக்கும் காட்சி அருமை.இறுதியாக வரும் பஸ் காட்சி பலரது வாழ்கையில் நடந்திருக்கும்! நல்ல படம் அதனால் நமது மொக்கை படவரிசையில் மூன்றாம் இடம். மொத்தத்தில் “அட்டக்கத்தி”-இளைஞர்களின் நெஞ்சை குத்திவிட்டது!

மிரட்டல் –தல அஜித் படத்தின் டைட்டில் ! அந்த ஒரே காரணத்துக்காக போய் பல்பு வாங்கிய படம். ஒரே ஒரு கேள்வி “என்ன இளவுக்குடா தாதா தங்கச்சிய நம்ம ஹீரோக்கள் லவ் பண்ணுறத நிறுத்த மாட்டேங்குறாங்க” டம்மி வில்லன் , பாசமான தாதா பிரபு , ஆறடி லைட் போஸ்ட் ஹீரோ, அஞ்சடி ஆரஞ்சு பழ ஹீரோயின்! மனதுக்கு ஆறுதலுக்காக நம்ம சந்தானம்! இதை தவிர படத்தில் ஏதும் இல்லை. படம் பார்க்கும் போது சிரித்தாலும் படம் முடிந்த பிறகு மிஞ்சுவது ஏமாற்றம் தான் .
மன்சுரலிகாந்த்,பாண்டியராஜன்,சந்தானம் மட்டும் நகைச்சுவையால் தனியே தெரிகிறார்கள்.”ரேடியோ ரேடியோ ” பாடல் மட்டும் பிடித்திருந்தது. மற்றப்படி மிரட்டல்- மிரட்டுகிறது படம் பார்க்க போனவர்களை!

18 வயசு – “ரேணிகுண்டா” இயக்குனரின் அடுத்த படைப்பு! ஆனால் ரேணிகுண்டா படத்தின் கால் தூசுக்கு கூட நிகரில்லாத உலக மொக்கை படம். ஐயோ! அந்த கருமாந்திரம் பிடிச்ச படத்த நினைக்க கூட முடியல! ஹீரோக்கு மனவியாதி எந்த விலங்க பாத்தாலும் அது மாதிரி ஆகிருவாறு (மனதளவில் மட்டும்) என்ன சொத்த சொறி கதை! நண்பர்கள் பேச்சை கேக்காமல் ரேணிகுண்டா மோகத்தில் போய் அழுதுவிட்டு வந்த படம் . என்ன விமர்சனம் சொல்ல! காதலியின் தொல்லை தாங்கதவர்கள் இந்த படத்துக்கு கூட்டிட்டு போங்க! அடுத்த நாள் நாய் மாதிரி குலையுங்க! பிறகு பக்கத்தில கூட வரமாட்டாள். போங்கப்பா கெட்ட கெட்ட வார்த்தை தான். வாயில வருது! அதனால் நமது மொக்கை பட வரிசையில் முதல் இடத்தை தட்டி செல்கிறது! மொத்தத்தில் “18 வயசு” – படம் பாக்க போறவங்களுக்கு அல்பாயிசு!
மேலும் விமர்சனங்களுக்கு ,






Friday, August 24, 2012

மண்ணாங்கட்டி-மாற்றான் இசை விமர்சனம்




வணக்கம் நண்பர்களே !
 

ரொம்ப நாள் கழிச்சு ஒரு விமர்சனம் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி
இதில இன்னா குஷ்டம்ன்னா இதுகெல்லாம் விமர்சனம் எழுதணுமா ?
என்னுறது தான்! மாற்றான் படம் தான் காப்பின்னு பாத்தா (இந்த லிங்க சொடுக்கி பாருங்க :http://niroshanjc.blogspot.com/2012/07/stuck-on-you.html.) பாட்டு காப்பியோ காப்பி!


 ஐஞ்சு பாட்டு! 
எந்தப் பாட்ட கேட்டாலும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.” யோவ் ஹாரிஸ் உனக்கு புதுசா பாட்டு போட வரவே வராதா “ என்னு ரசிகர்கள் கழுவி கழுவி ஊத்தும் ரேஞ்சுக்கு எல்லா பாட்டும்! என் தலை எழுத்து இத எழுதுறது ! உங்க தலை எழுத்து இதை எல்லாம் படிக்கிறது.

01.ரேட்டை கதிரே – நா.முத்துக்குமாரு பாட்ட எழுதி இருக்காரு! இன்டர்டக்சன் சாங்காம்! ”என்றென்றும் புன்னகை” பாட்டுட பீட்ட எடுத்து “கஸலி பிஸலி” பாட்ட கசக்கி பிழிஞ்சு! போட்டிருக்காரு! எதோ சும்மா கேக்கலாம்!
ரேட்டை கதிரே – மொட்டந்தலையில மல்லிகைப்பூ !


02.நானி கோனி ராணி – ஆஹா என்ன ஒரு கற்பனை! கருமாந்திரம் பிடிச்ச்சவன்களா ! நானியும் ராணியும் என்ன கொணிக்குள்ளையா குடும்பம் நடத்துறாங்க! விவேகாவின் வரிகளுக்கு ஆஸ்கார் அவாட் குடுக்கலாம்.”வாராயோ வாராயோ” பாட்ட போட்டு இடையில “போய் சொல்ல இந்த மனசுக்கு” பாடுட “எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே” மியூசிக்க போட்டு ஒரு மாதிரி பாட்ட முடிச்சிருக்காரு.
நானி கோனி ராணி- வாய மூடிடோ போ நி !


03.தீயே தீயே –அண்ணன் பா.விஜய் பாட்டு எழுதி இருக்காரு! கிளப்ல பாடுற பாட்டு ஒரு வரி கூட விளங்கல. என்ன சொல்லவாறீங்க விஜய் சார் ! மற்றும் ஒரு மொக்க பாட்டு! சகிக்கல! எத்தினி பாட்டோட மியுசிக்க சுட்டுருக்கருன்னு ஹாரிஸ்ஸுக்கு கூட தெரியாது !ரப்ப மட்டும் “ஹசளி புசளி” சுட்டு சாவடிச்சிருக்காறு மனுஷன் !
தீயே தீயே – வயிறு எரியுது !


04.யாரோ யாரோ –“யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை” அதாங்க பழனி படப்பாட்டுட பீட்டு ,ஸ்பீட்டு எல்லாத்தையும் குறைச்சு புதுசு மாதிரி போட்ட கண்டு பிடிக்க மாட்டம்னு நினைச்சீங்களா ஹாரிஸ் சார் !தாமரையின் வரிகள் அருமை ! இரண்டு பேரும் வெட்டி பிரிக்கப் பட்ட பிறகு பீல் பண்ணி பாடுற மாதிரி பாட்டு அத கேட்டு நான் பீல் பண்ணினது தான் கூட! போங்கடா நீங்களும் உங்க மொக்க செண்டிமெண்ட் பாட்டுகளும் எப்படா தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போக போறீங்க . கொசுறு தகவல் இப்பிடி ஒரு பாட்டு “Stuck On You” படத்திலயும் இருக்கு!
யாரோ யாரோ –சத்தியமா நான் இல்லைங்க!


05. கால் முளைத்த பூவே –கார்க்கியின் வரிகள் ஹாரிஸின் மியூசிக்கில் கிக்கி,சீரழிஞ்சு ,நசிஞ்சு,நார் நாரா போய்ச்சு! என்ன வரிகள் என்ன கருமாந்தரத சொல்லுறாங்க ஒரு எழவும் விளங்கல! மியூசிக் சுட்டார் என்னு சொல்ல மாட்டேன். எனுனா இது எல்லா “பலே” நடனங்களிலும் பயன் படுத்தும் பலே மியூசிக்!
கால் முளைத்த பூவே – காதல ரெத்தம் வருகுது

சொந்தமா படமும் எடுக்க மாட்டீங்க! சொந்தமா பாட்டும் போட மாட்டீங்க !
அப்ப என்ன ம .....க்கு சிங்கப்பூர்ல கொண்டே இசை வெளியீட்டு விழா சேய்யிறீங்க! அங்க போய் எங்க தமிழ் மானத்த விக்கவா!
மொத்தத்தில் மாற்றான் இசை –பீசா ,பெர்கர் இருக்க வேண்டிய இடத்துல தவிடும் பருத்தி கொட்டையும் ,புண்ணாக்கும் வைச்சிருக்காங்க!

 பி.கு: சரி விடுங்க !போகும் போது மறக்காம ஒரு லைக்கை இந்த பேஜுக்கு போட்டுட்டு போங்க.

Friday, July 20, 2012

மண்ணாங்கட்டி - துப்பாக்கியின் கதை அம்பலம்





துப்பாக்கி” ஒவ்வொரு விஜய் ரசிகர்கனதும் தற்போதைய இதயத்துடிப்பு! படத்தை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை! படத்தினுடைய கதை பற்றி ஒரு வதந்தி கூட வராததால் (ஹிஹிஹி கிளப்ப போறோமில்ல) உங்களுக்காக பல கேப்பமாரித்தனங்கள் செய்து! சந்தோஷ்சிவனுடைய ஆஸிஸ்டனோட பிகரு மாதிரி கடலை போட்டு உருவிய கதை உங்களுக்காக! (படம் வந்த பிறகு திட்டி கமன்ட் போட மாட்டோம் என்று சத்தியம் செய்து விட்டு கீழே போங்க!)

“இன்றைய உலகம் கணணி தொழில்நுட்பத்தை மட்டும் பெரிதும் நம்பி இயங்கி கொண்டிருக்கிறது..................”என்னு தொடங்கும் டொக்குமண்டரி உடன் டைட்டில்! (“விஜய் போலிசுன்னு சொன்னாங்க! பொய் சொல்லாத மண்ணாங்கட்டி” அப்பிடி சொல்லப்படாது தொடர்ந்து வாசியுங்க).

எயாபோர்டில் பணையக் கைதியாக மத்திய அமைச்சர் ஒருவரை பிடித்து வைத்து மிரட்டும் தீவிரவாதிகளை பிடிக்க ஜெகதீஸ் (அதாம்பா நம்ம இளைய தளபதி)தலைமையிலான அதிரடிப்படை களமிறங்குகிறது! (சத்தியமா விஜயகாந்த் படம் இல்லைங்க) மூணு பேரின் உயிரை கொடுத்து அமைச்சரை காப்பற்ற அவரும் இதற்கு உடந்தை என்னு நம்ம தளபதிக்கு தெரியவர gunன எடுத்து டிஸ்யும் அமைச்சர போட இவர வேலைய விட்டு தூக்கிர்றாங்க!

போங்கடா உங்க வேலையும் நீங்களுமுன்னுட்டு ட்ரெயின் புடிச்சு மும்பைக்கு போய் சத்தியனோட தங்கி வேலதேடுராறு! தளபதி ஜாவாவில புலியாம்! அதனால ஐரீ கம்பனில வேலை கிடைக்குது! அங்க நம்ம ஹீரோயின் காஜல சந்திக்கிறாரு! ஏற்கனவே சென்னைல காஜல மாப்பிள்ள பக்க போனவருக்கு பதிலா யுனிபோம்ல தளபதி போய் பொம்பள ரவுடிய பற்றி விசாரிக்க அவங்க வீட்டுகாரங்க காஜல பற்றி சொல்லி கலகல காமிடி சீனாம்! 

மும்பையில் நம்ம தளபதிக்கும் காஜலுக்கும் லவ்வு பத்திகொள்ள சுமுகமா போகும் கதையில்! “ம்பப்ருதி” (இது விளங்கினா கமன்ட் போடுங்க!)! மும்பை பங்குச்சந்தையின் வலை தளத்தில் சில மாற்றங்கள் தானாக நடக்க குழம்பிப்போகும் அதிகாரிகள் தளபதியின் உதவியை நாட! அவரு ஒரு கம்பியுட்டர்ல இருந்த படியே ஹக் செய்ய முயலும் கம்பூட்டர வெடிக்க வைக்கிறாராம் !(இணையத் தளத்தில் தேடி பார்த்து இது சாத்தியமா என சொல்லுங்கள்!) 

இதன் பிறகு தளபதியை சைபர் கிரைம் தடுப்பு அதிகாரியா (???) மத்திய அரசு பதவி கொடுக்க! தளபதி இருக்கும் வரை இந்தியாவின் முக்கிய இணைய தளங்களை கைப்பற்ற முடியாது! என்பதால் தளபதியை கொல்ல பாம் வைக்க வழமை போல தளபதி எஸ்கேப் பாவம் காஜல் கண்ணு புட்டுக்குமாம்!
பிறகு என்ன வழமை போல எதிரிகளை தேடி பலிவாங்குறது தான் கதையாம்! கடைசி கிளைமாக்ஸ் ராணுவ ரகசியங்களை ஹக் செய்ய முயலும் கும்பலிடமிருந்து பாதுகாக்க வில்லனை காரில் துரத்திக் கொண்டே காஜலுக்கு கம்ப்யூட்டர் “கோட்ஸ்” சொல்ல அதை போன்ல கேட்டு கண் தெரியாத காஜல் எப்பிடி தடுக்கிறாங்க! அது தான் முடிவு! (கண்ண திறத்திட்டு டைப் பண்ணவே உயிர் போகுது இதுல .... சரி விடுங்கப்பா!)

இடையில் சைபர் கிரைம் உயர் அதிகாரியாக ஜெயராம் நல்லவரா ? கெட்டவரா? உண்மையில் விஜய் யார் ? வில்லன்களின் நோக்கம் என்ன ? விஜயால் சத்தியன் லோக்கல் ரவுடிகளிடம் சிக்கி சீரழிவது! என்று படம் முழுவதும் சுவாரசியதுக்கு பஞ்சம் இல்லையாம்! இன்னும் மூன்று பாடல்கள் படமாக்க வேண்டி இருப்பதால் படம் தீபாவளிக்கு தான் வருமாம் !
(இது அந்த பன்னாட பயல் சொன்ன கதை! டை ஹர்ட் -4 படம் தான் ஞாபகம் வருகுது படம் வந்த பிறகு இது உண்மையா பொய்யா என சொல்லுங்க !) 

விமர்சனங்களை நகைச்சுவை உணர்வோடு சொல்லும் மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள்
தொடர்புகளுக்கு :http://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal 
நன்றி - கலைஞன் 



Thursday, July 19, 2012

மாற்றானில் சந்தேகம் கேட்டு ! மாட்டிக்கொண்டு முழிக்கும் மண்ணாங்கட்டி! - கே.வீ.ஆனந்த் விளக்கம்!


விமர்சனங்களை நகைச்சுவை உணர்வோடு சொல்லும் மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள்
தொடர்புகளுக்கு :http://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal
நேற்று முன்தினம் மாற்றான் தொடர்பான சந்தேகம் ஒன்றை பதிவு செய்தது ! தான் எதிரொலி ட்விட்டர் வரை சென்று கே.வீ ஆனந்த் விளக்கம் சொல்லும் அளவிற்கு போய்விட்டது ! 
 
இதற்கு கே.வீ.ஆனந்த்  அவர்கள்  படம்  வந்த பிறகு பதில் தெரியும் என்று கூறியுள்ளார் ! 
பாவம் மண்ணாங்கட்டி
சூர்யா ரசிகர்களால் வெறி கொண்டு தேடப்பட்டு வருகிறார் ! மிஸ்டர் மண்ணாங்கட்டி உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத ஆராட்சி !
  

நேற்று முன்தினம் மண்ணாங்கட்டி  தரவேற்றம் செய்த புகைப்படம் !
http://www.facebook.com/photo.php?fbid=295160117249384&set=a.285948151503914.59184.285940164838046&type=1&theater




 

Friday, July 13, 2012

மண்ணாங்கட்டி- Stuck on You (மாற்றான்) விமர்சனம்



வணக்கம் தோழர்ஸ்!
 
மாற்றான் ட்ரைலர் வந்தது தான் வந்திச்சு ! ஒவ்வொருத்தனும் பேஸ்புக்குல “Stuck on you” படத்தோட கொப்பின்னு தெரியாத இங்கிலிசு படத்தை எல்லாம் சொல்லுறாங்க. அப்பிடி என்னதான் இருக்குன்னு படத்த டவுன்லோட் பண்ணி பாத்தா (தமிழே உனக்கு விளங்காது இதுல இங்கிலிசு படம் வேற பாக்குறியான்னு கேக்கதிங்க பாஸ் எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் ) நல்லாத்தான் இருக்கு .
 
பிறவியிலே ஒட்டிப் பிறந்த ரேட்டையர்கள் வேற வேற திறமைகளை கொண்டிருக்காங்க. ஒருத்தன் நல்ல சமைக்குறான் மற்றவன் நல்ல நடிக்குறான். ஒட்டி இருக்குறதால சந்திக்கிற பிரைச்ச்சனைகள்.பிரித்த பிறகு ஏற்படும் பசப்போரட்டமும் தான் கதை.
 
படத்தில த்திரிலிங் எல்லாம் இல்லை.சும்மா அதுபாட்டுக்கு போகுது.நம்ம இயக்குனர் சேரனோட படம் மாதிரி உணர்ச்சி பூர்வமா பாக்கலாம்.தவிர பில்ட்அப் எல்லாம் இல்லை.பார்ல நடக்கிற சண்டை மட்டும் சூப்பர். கே.வீ.ஆனந்தோட படத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒட்டி பிறந்தவர்களது கதை என்ன ஒன்றை மட்டும் வைத்து மாற்றான அவர் சுட்டார் என்று சொல்வது தவறு.(கொய்யால ஒரு படத்த ஹாரிஸ் மியூசிக் மாதிரி அப்பிடியே சுடுவான்களா! நம்ம ஜீ.வீ.பிரஹஸ் மாதிரி தெரியாத மாதிரித்தான் சுடுவாங்க.)
 
இதுல ஒட்டி பிறந்த ரேட்டையர்கள் வேற வேற! மற்றன்ல ரெண்டும் ஒரே மாதிரி! கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் கதை வேறாகத்தான் இருக்கும். 

தப்பி தவறி இதே கதையாக இருந்தால்:
விஜய்க்கு ஒரு சுறா !
அஜித்க்கு ஒரு ஆழ்வர்!
விக்கிரமுக்கு ஒரு ராஜபாட்டை!
சூர்யாவுக்கு மாற்றான் ஆகிரும்! 



பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன்  

Saturday, July 7, 2012

மண்ணாங்கட்டி - The Orphan- விமர்சனம்




வாசக நெஞ்சங்களுக்கு மண்ணாங்கட்டியின் வணக்கங்கள்!

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம் “ORPHAN”.இது ஆங்கில “ஹோரர்”(அதாங்க திகில்) திரைப்படம்.கத்தி இல்லாமல்,கொடுரமான கொலைகள் இல்லாமல் படம் எடுத்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது.சாதாரண நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைசி பத்து நிமிடங்கள் காட்டாறாக பாய்வது தான் திரைபடத்தின் சுவாரஸ்ய கணங்கள்.
 

கதை :
அநாதை விடுதிக்கு செல்லும் தம்பதிகள் அங்கு அமைதியாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் எஸ்ட்டரை தத்தெடுக்கிறார்கள்.அதன் பிறகு ஸ்ட்டரால் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் தான் கதை அவர்களுக்கு ஒரு மகனும், வாய் பேசமுடியாத மகளும் ஏற்கனவே இருப்பதும் ஒரு மகள் இறந்து போனதும் என்று கதையை விரிவு படுத்தி கடைசி நிமிடங்களில் ரணகளப் படுத்தி இருக்கிறார் இயக்குனர். பின்னணி இசை ,கதாபாத்திர தேர்வு, கதைக்களம்,படம் பிடிக்கப்பட்ட இடங்கள் என்று எல்லாம் மிக அருமை!
 

கொலை செய்யும் சிறுமியை பேயாக சாத்தானாக சைக்கோவாக கட்டாமல் வேறு விதமாக புதுமையாக்கக் காட்டியது இயக்குனரின் வெற்றி.. சில அசைவ வார்த்தைகள் ,சில அசைவைக் கட்சிகள் இருந்தாலும் திகில் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி ..!
மொத்தத்தில் “ORPHAN”- திகில் சுவர்க்கம் !
(எச்சரிக்கை:- மச்சீஸ் படம் பார்த்து கொஞ்ச நாளைக்கு இரவில எந்த சின்ன பிள்ளைய பாத்தாலும் சூச்சூ வாற மாதிரி இருக்கு )  

பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன்  

Friday, July 6, 2012

மண்ணாங்கட்டி - நான் ஈ விமர்சனம்

                                                








வணக்கம் பாஸ் அண்ட் பாஸிஸ்,
“நான் ஈ” அப்பிடின்னா நாங்க என்ன கொசுவா என்னு டைரக்டர கலாய்க்க கூடாது. பாவம் மனுஷன் வித்தியாசமா ட்ரை பண்ணிருக்காரு . முதல்ல அவர பாராட்டிப்புடுவம்.

ஊருக்குள்ள சமூக சேவை செய்யிறாரு நம்ம சமந்தா, ஹீரோ நானி சமந்தா வீட்டுக்கு எதிர் வீட்டில இருக்குறாரு (கொக்கமக்கா ஏண்டா எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில மட்டும் “ஓகே ஓகே அட தேனட” மாதிரி பிகருக்க என்னு வருத்தப் படாதிங்க நண்பர்களா எல்லாம் விதி!) நம்ம வில்லன்கிட்ட சமந்தா டொனேசன் வாங்க போக வழக்கம் போல அவருக்கும் சமந்தா மேல லவ்ஸ் ஆகி 15 லட்சம் குடுத்து அனுப்புறாரு. பிறகு என்ன சமந்தா நானிய லவ் பண்ணுற விஷயம் தெரிஞ்சு நானிய ஆள வைச்சு போட்டு தள்ளுராறு.படத்த இனி எப்பிடி முடிக்கிறது. 


ஹீரோ வில்லன பலி வாங்கணும் ஆவியா வந்து கமல் சாரோட “கல்யாணராமன்” மாதிரி பழிவாங்கலாம். இல்லாட்டி தலைவரோட “அதிசய பிறவி ” ஸ்டைல்ல பழிவாங்கலாம். ஆனா ஈயா பிறந்து பழி(லி)வாங்கிறது தமிழ் சினிமாக்கு இல்ல உலக சினிமாவுக்கே புதுசு.
சிஜி சிஜி என்னு எதோ இருக்காம் (செல்போன் திரி ஜியோட அக்காவா இருக்குமோ) அதுல தான் அனிமேசன் சேய்திருக்காங்களாம். அனா சுப்பரப்பு! 




ஒவ்வொரு காட்சியும் அலட்டல் இல்லாத அதிகப்படி இல்லாத அனிமேசனால் கவர்ந்து இருக்காரு டைரக்டர். மதன் கார்கியுடைய “வீசும் வெளிச்சத்திலே” பாடல் வரிகள் அருமை. “ஈடா , ஈடா” பில்ட் அப் சாங் (ஈக்கெல்லாம் பில்ட்டப்பா) புதுமை.பின்னணி இசை ரணகளம். நானி ,சமந்தா வில்லன், எல்லாம் கன கட்சிதம். தியட்டருக்கு போய் குடும்பம் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய நல்ல படம். வருகின்ற 13 ஆம் திகதி வரை வசூலை அள்ளப் போவது உறுதி! (13 நம்ம தலையோட பில்லா 2 வருகுதடியோ!)




பின் குறிப்பு :    இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.


நன்றி - கலைஞன்  

Thursday, July 5, 2012

மண்ணாங்கட்டி - சகுனி விமர்சனம்

சகுனி விமர்சனம் 




மச்சீஸ் (மச்சான்ஸ்+மச்சினீஸ்) ,
 
யாரோ ஒரு அப்பாவி தயாரிப்பாளர் நம்ம டைரக்டர்கிட்ட மாட்டிக்கிட்டார் . உடன நம்ம கார்த்திய புக் பண்ணிட்டார் டைரக்டர். பிறகு என்ன ஹீரோயின் தேவை அதுக்கு நம்ம ஐஸ்கிரீம் மாதிரி இருக்கிற பிரணீதாவ புக் பண்ணிட்டார் .ஹீரோவோட அத்த பொண்ணு நம்ம ஹீரோயின் (புதுசா இருக்குல). நம்ம சந்தானத்தோட கால்ல விழுந்து கால்சீட் வாங்குராறு.
வில்லன் செல்லம் பிரகாஷ்ராஜ். அரசியல்வாதி ஆக்கலாம் என்னு ஜோசிக்கிறாரு.
 
பிறகு பாவம் டைரக்டர் கதைக்கு எங்க போவாரு “தூள்” பட டீவீடீ வாங்கி போட்டு பாக்குறாரு. ஓகே ஹீரோ கிராமத்து ஆள் ! அங்க பாக்டரிய மூடணும் சரி இங்க வீட்ட காப்பாத்தணும்! அங்க சொர்ணாக்கா வில்லி !இங்க சொர்ணாக்கா மாதிரி இருக்கிற ராதிகாவ ஹீரோக்கு ஹெல்ப் பண்ண சொல்லுறாரு . அங்க சீஎம் நல்லவர் ! இங்க அவர் தான் வில்லன் ! அங்க சீஎம் ஆக ட்ரை பண்ணுறவர் வில்லன் இங்க (நம்ம சிரிப்பு திலகம் கோட்டா சீனி ) நல்லவர். கதை ரெடி!!! இடை இடையே “பூவே தேனே பொன்மானே” எல்லாம் சேர்த்து படத்த முடிக்கிறாரு.
 
ஜீ.வீ.பிரகாஷ் இசை – எங்கேயோ கேட்ட குரல். “மனசெல்லாம் மழையே” பாட்டு மட்டும் மனதுக்கு இதம்.பின்னணி இசை "பிளீஸ் விட்டிருங்க” . ஒளிப்பதிவு ஓகே . அனுஷ்கா ,ஆண்ட்ரியா ,ரோஜா இன்னாத்துக்கு வாராங்க என்னு எனக்கும் தெரியல அவங்களுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.
முன்பாதி காமிடி – பின்பாதி கொலைவெறி !!
மொத்தத்தில லாஜிக் பாக்கம டைம் பாஸுக்கு படம் பாக்கிரவங்களுக்கு நல்ல படம். மத்தவங்க பட போஸ்டர கூட பாக்கதிங்க.
சகுனி –ச(கு)னி...! (ட்ரைலர காட்டி ஏமாத்திப்புட்டங்க மச்சான்!)
 
பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன் 

மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள்

 முன்னோட்ட விமர்சனம் - விஸ்வரூபம், பில்லா 



வணக்கம் நண்பர்ஸ்!
முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து தமிழ் ரசிகர்களின் இதய துடிப்பை அதிகப் படுத்தியிருக்கும் “விஸ்வரூபம்” ,”பில்லா 2” ஆகிய படங்களை பற்றிய மக்களின் நேரான , எதிர் மறையான விமர்சனங்களை பார்க்கலாம். (கொய்யால நமக்கு இந்த சுத்தத் தமிழ் வருகுது இல்ல!)
விஸ்வரூபம்
உலக நாயகன் இவருக்கு நம்ம தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போறது தன நோக்கமாம் (????).ஆனா ட்ரைலர பாத்தா ஆப்கானிஸ்தானுக்கு தான் கொண்டு போய் இருக்காரோ என்னு தோனுது. அது என்ன நாட்டியம் பழகினா ஆம்பிளைங்க எல்லாம் அலி மாதிரி கதைப்பாகளோ! இத எல்லாம் தம்ம தலையிட வரலாறு படத்திலயே பாத்தாச்சு. படத்துல ஒரு பஞ்(சர்) டயலாக்கு “இந்தக் கதையில எல்லாருக்கும் டுவல் ரோல்”. வேணாம் ஆளவந்தான் பாத்து நொந்துபோன எங்களை மறுபடியும் சவடிக்காதிங்க!
“மன்மதன்அம்பு” குத்தி வந்த காயம் இன்னும் போகல. மறுபடியும் ஒரு வலிய தமிழ் மக்கள் தாங்க மாட்டங்க. எங்களுக்கு நீங்க கதைச்சாலும் விளங்குரது இல்லை ! நீங்க படம் எடுத்தாலும் விளங்குறது இல்லை!
தசாவதாரத்தில அந்த நம்பிக்கும் கதைக்கும் என்ன சம்மந்தம் என்னு கேட்டா ? விளங்கினவங்க மட்டும் படத்த பாருங்க என்னு நம்ம கே.எஸ்.ஆர் பதில் சொல்லி இருக்காரு. மண்வெட்டி தலையங்களா நீங்க சம்மந்தமே இல்லாம கத சொல்லுவீங்க. நாங்க கை தட்டிட்டே படம் பாக்கணுமா ? கடைசியா இந்த மண்ணாங்கட்டியோட ப்ரீ அட்வைஸ் எந்த அடிமையாவது பாத்து நல்லதா விமர்சனம் எழுதினா மட்டும் தியட்டருக்கு போங்க ! இல்லாட்டிக்கு இந்திய தொலைக்கட்சிகளில் முதல்முறையாக வரைக்கும் வெயிட் பண்ணுங்க !

பில்லா 2
நல்ல படம் வந்தா விஜய் ரசிகர்கள் கூட அஜித் படம் பாப்பாங்க என்னு நிரூபிச்ச படம். மங்காத்தா “(மங்காத்தடா)”. அதற்கு பிறகும் பில்லாவின் இமாலைய வெற்றியின் தொடர்ச்சியாகவும் வரும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை பற்றி நான் சொல்ல தேவை இல்லை.
ஆனா படத்தோட ட்ரைலர பாத்ததான் ஒரே பேஜாரா இருக்கு. சாரம் கட்டிக்கொண்டு அகதியா வர்றவன் எப்புடி கோட்டு போட்ட பில்லாவா ஆகிறான் என்னுறது தன கதையாம். ஒருவேள சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயில சொன்ன கதையா இருக்குமோ (இது விளங்கதவங்க விண்ணைத்தாண்டி வருவாயில வீடீவீ கணேசும் சிம்புவும் சந்திக்கும் காட்சிகளை பார்க்கவும்!) அது ஏன் தல “நீயாநானா கோபிநாத்” மாதிரி எல்லா படத்திலயும் கோட்டு போட்டுட்டு நடிக்கிறீங்க. இந்த வேகாத வெயில்ல இந்த பில்டப் தேவையா ?. ட்ரைலர் புல்லா குண்டு வேடிக்கிறதும், துப்பாக்கி சுடுகிறதும்! தல நாங்க தியட்டர்ல இருந்து உயிரோட வெளியில வருவமா ?
மறுபடியும் ஒரு ப்ரீ அட்வைஸ் : தல ரசிகர்கள் தவிர்ந்தவர்கள் முதல் நாள் காட்சிகளை தவிர்ப்பது உங்கள் உடலுக்கு நல்லது “ஒரு வேள படம் மொக்கையா இருந்து நீங்க காண்டாகி கமன்ட் அடிக்க தல பான்ஸ் உங்கள மிதிக்க இது எல்லாம் தேவையா?” (சொந்த அனுபவம் ஏகன் படத்துக்குப் போய் வாயக்குடுத்து அஜித் பான்ஸ்ட வாங்கி கட்டிக் கொண்டது! இன்னா அடி!)
 

 பின் குறிப்பு :    இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal

நன்றி - கலைஞன்